முகமது நபிகள் சர்ச்சை..!!  முகமது ஜுபைருக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு பதிவு..!!

பாஜக செய்தித் தொடர்பாளர்  நுபுர் சர்மா முஹம்மது நபியை பற்றி விமர்சித்திருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சை ஆன நிலையில் நாடு முழுவதும் சமூக வலைதளங்களை டெல்லி போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதில் ஆல்ட் நியூஸ் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர் தவறான கருத்து பரப்பியதால் அவருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆல்ட் நியூஸ் செய்தி இணையதளத்தின் இணை நிறுவனர் முஹம்மது ஜுபைர், ட்விட்டரில் செய்த பதிவு சிக்கியதாக கூறி டெல்லி போலீசார் அவரை விசாரணை அழைத்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது இந்திய தண்டனை கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவர் மீது மேலும் ஒரு வழக்கை டெல்லி போலீஸ் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் கிரிமினல் சதி, சாட்சியங்களை அழித்தல், மற்றும் அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் முகமது ஜுபைரை 14 நாட்கள் விசாரணைக்கு எடுக்க டெல்லி போலீஸ் அனுமதி கோரியுள்ளது.அந்நிய பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இனி முகமது ஜுபைரிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணைகள் மேற்கொள்ளலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *