பயணிகள் அச்சம்.!! விமானத்தில் கிளம்பிய புகையால் அவசரமாக தரையிறக்கம்..!!
டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் திடீரென புகை கிளம்பியதால் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் சுமார் 5000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த திடீரென்று புகை கிளம்பியதால் விமானம் அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திரும்பியது.
இது தொடர்பாக ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவன செய்தி தொடர்பாளர் பேசுகையில் டெல்லியில் இருந்து இன்று காலை ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று ஜபல்பூர் நோக்கி புறப்பட்டது.
விமானம் மேலெழும்பிய சில நிமிடங்களிலேயே உள்ளே இருக்கும் கேபினில் இருந்து திடீரென புகை கிளம்பியது. இதையடுத்து விமானம் அவசரமாக மீண்டும் டெல்லிக்கே திருப்பி வரவழைக்கப்பட்டது.
கடந்த 15 நாட்களில் ஸ்பைஸ் ஜெட் விமானம் இதுபோன்ற அவசரமாக தரையிறங்குவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜூன் 19 ஆம் தேதியன்று டெல்லி நோக்கிச் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமான பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பறவை மோதியதால் இடதுபுற இன்ஜினில் தீப்பற்றியது என்பது குறிப்பித்தக்கது. விமானி துரிதமாக செயல்பட்டதால் இதில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினர். இந்நிலையில் இது இரண்டாவது முறையாகும். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.