விவசாயத்தை காப்பாற்ற ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராகுல் காந்தி
மூன்று நாள் பயணமாக ராகுல் காந்தி இன்று கேரளா வந்துள்ளார். கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த அவரை கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.
இதையடுத்து தனது சொந்த தொகுதியான வயநாடு சென்ற ராகுல் காந்தி அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி நமது நாட்டில் இன்று விவசாயமும் விவசாயிகளும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார்.
இதனால் விவசாயிகள் தங்கள் சொந்த தொழிலை விட்டு வெளியேறி வருவதாக குறிப்பிட்டார். விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
கண்ணூர் விமான நிலையத்தில் இருந்து ராகுல் காந்தி வயநாட்டில் காரில் பயணம் செய்தார். அப்போது காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் கூடி நின்று அவரை வரவேற்றனர்.
தனது தொகுதிக்கு இன்று வந்துள்ள ராகுல் காந்தி தொடர்ந்து 3 நாட்கள் கேரளாவில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி வயநாட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகம் கடந்த ஜூன் 24ம் தேதி சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பினரால் சூறையாடப்பட்டது குறிப்பித்தக்கது.