வருமான வரித்துறை நோட்டீஸ்..!! கிண்டல் செய்த சரத்பவார்..!!
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த சரத்பவார், வருமான வரித்துறை எனக்கு காதல் கடிதம் அனுப்பியுள்ளது என கிண்டல் அடித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ க்கள் பலரும் வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்தில் சிக்கி உள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
2014, 2020 ராஜ்யசபா தேர்தல்களில் சரத்பவார் போட்டியிட்ட போது தேர்தல் ஆணையத்திடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அந்த பிரமாணப் பத்திரங்களில் இடம்பெற்றுள்ள சொத்து விவரங்கள் குறித்து விசாரிக்க சரத்பவாருக்கு இப்போது நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது வருமான வரித்துறை.
இது குறித்து சரத்பவார் கூறி இருப்பது அமலாக்கப் பிரிவு உள்ளிட்ட மத்திய விசாரணை ஏஜென்சிகள் எதற்கு பயன்படுத்தப்படுகின்றது என்பதை வெளிப்படையாக இப்போது தெரிகிறது. மகாராஷ்டிரா எம்.எல்.ஏக்கள் பலருக்கும் மத்திய விசாரணை ஏஜென்சிகள் நோட்டீஸ் அனுப்பி வருகின்றன.
இந்த புதிய அணுகு முறையை தொடங்கி வைத்திருக்கிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அமலாக்கப் பிரிவு என்றால் என்ன என்பது பொதுவாக தெரியாது. ஆனால் இது தான் தற்போது பலருக்கு சிக்கலை உருவாகியுள்ளது என குறிப்பிட்டார்.