அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!! 46 அகதிகள் சடலங்களாக மீட்பு..!!

கடந்த சில மாதங்களில் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் அதிக எண்ணிக்கையிலான அகதிகள்  வர தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ நகரில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் அருகில் இருந்த ட்ரக் ஒன்றில் மூச்சுத்திணறி உயிரிழந்த 46 பேர் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மேலும் இதில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 16 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவர்கள் அனைவரும் மெக்சிகோ நாட்டில் இருந்து அகதிகளாக அமெரிக்காவில் குடியேற முயன்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இது குறித்து மெக்சிகோ வெளியுறவு அமைச்சர் மார்செலோ எப்ரார்ட் கூறுகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் ட்ரக்கில் சென்ற இந்த அகதிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.   

அவர்கள் மெக்சிகோவை சேர்ந்தவர்களா என்பது இன்னும் உறுதியாக வில்லை என்றார். அவர்களின் உடல் மிகவும் சூடாக இருந்ததாக தெரிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவுக்கு சமீப காலமாக குடிபெயர முயற்சித்தவர்களில் ஆயிரக்கணக்கானோர் இது போன்று உயிரிழந்திருக்கிறார்.

அதுவும் எல்லையை கடக்க டிரக்கில் வருபவர்கள் உயிரிழப்பது அதிகமாக உள்ளது. மெக்சிகோவில் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறுகின்றனர். இதைத் தடுக்க சுமார் 650 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. ஆனாலும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்கதையாக உள்ளது என கூறினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *