முகமது ஜுபைர் கைது..!! கண்டனம் தெரிவித்த ராகுல் காந்தி..!!

ஆல்ட் நியூஸ் (AltNews) ஊடக நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும் பத்திரிகையாளருமான முகமது ஜுபைர் மதத்தை இழிவு செய்வதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நுபுர் சர்மாவின் சர்ச்சை கருத்தை உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் பத்திரிகையாளர் முஹம்மது ஜுபைர் என்று கூறப்படுகிறது. நுபுர் சர்மாவின் பேச்சு தொடர்பாக தனது ஆல்ட் நியூஸ் இணையதளத்தில் முதன்முதலில் செய்தி வெளியிட்ட அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து இருந்தார். 

தொடர்ந்து மதக்கலவரங்களை தூண்டும் விதத்தில் ஜுபைர் ட்விட்டரில் தனது கருத்துக்களையும் தெரிவித்து வந்தார் என கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புகள்  எழுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், பாஜகவின் பொய், வெறுப்பு மற்றும் மதவெறியை அம்பலப்படுத்திய பவர்களுக்கு அச்சுறுத்தல் தான் இந்த கைது நடவடிக்கை என்று கூறியுள்ளார்.உண்மையின் ஒரு குரலை செய்வது ஆயிரம் குரல்களை எழுப்பும் என்றும், உண்மை எப்போதும் வெற்றி பெரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக காங். எம்.பி சசி தரூர் இந்த கைது நடவடிக்கை உண்மையின் மீதான தாக்குதல் என்று விமர்சித்தார். உடனடியாக முகமது ஜுபைர் விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *