மாணவர்கள் மர்ம முறையில் மரணம்..!! கிளப்பில் நடந்த மர்மம் என்ன..?
தென்னாப்பிரிக்காவின் தெற்கு நகரமான கிழக்கு லண்டனில் உள்ள ஒரு இரவு விடுதியில் மர்மமான முறையில் 21 இளைஞர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு லண்டனில் உள்ள இந்த விடுதிக்கு நேற்றிரவு 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சில பேர் வந்துள்ளனர். அனைவரும் இரவு விடுதியில் மது குடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிலையில் விடுதிக்கு வந்த சிறுவர்கள் 21 பேர் மர்ம முறையில் இறந்துள்ளனர். இது குறித்து போலீசார் தரப்பில்
சிறுவர்கள் குடித்த மதுவில் விஷம் எதுவும் கலந்து கொடுக்கப்பட்டதா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. மேலும் இறந்தவர்களின் உடல்களில் எந்தவித வெளிக்காயங்களோ இல்லை என்றும் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 13 முதல் 20 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்றும் குறிப்பிட்டனர்.
பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் அவர்களின் இறப்பு குறித்து காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.