ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்..!! பின்னணி என்ன..?

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சென்ற ஹெலிகாப்டர் மீது பறவை மோதியதால் வாரணாசியில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. வாரணாசியில் உள்ள ரிசர்வ் போலீஸ் லைன்ஸ் மைதானத்தில் இருந்து லக்னோ நோக்கி ஹெலிகாப்டர் புறப்பட்டபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து வாரணாசி  மாவட்ட ஆட்சியர் கவுசல்ராஜ் சர்மா கூறுகையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி சனிக்கிழமை வாரணாசிக்கு வந்து காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன்பின்னர் வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார். வாரணாசியில் இரவு தங்கிவிட்டு இன்று காலை லக்னோவுக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது முதல்வரின் ஹெலிகாப்டரை ஒரு பறவை மோதியது. இந்த நிகழ்வின் காரணமாக  ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கிய வேண்டியிருந்தது என்று  கூறினார். இதனைத்தொடர்ந்து  முதல்வர் யோகி அவர் அரசு விமானம் மூலம் லக்னோ புறப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *