ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!! இதுவரை 130 பேர் பலி..!! 

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் ஏற்பட்ட   நிலநடுக்கத்தால் இதுவரை 130 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் கோஸ்ட் நகருக்கு அருகே ஏற்பட்ட  நிலநடுக்கத்தில் 130 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு கோஸ்ட் நகருக்கு அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தது 130 பேர் பலியாகியுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நிலநடுக்கத்தில் குறைந்தது 155 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு நடத்தும் செய்தி நிறுவனம் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. 

நிலநடுக்கத்தால் பாக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. கோஸ்ட் நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடித்ததில் பலர் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *