மாலத்தீவில் பரபரப்பு..!! யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்தியர்கள் மீது தாக்குதல்..!!
சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21ம் தேதி) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை அனுசரிக்கும் விதமாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், மற்றும் மாலத்தீவு இளைஞர் நலத்துறை ஆகியன இணைந்து சர்வதேச யோகா தினத்தை இன்று காலை 6 மணிக்கு கலோலு விளையாட்டு அரங்கில் கொண்டாடி வந்தனர்.
அப்போது மாலத்தீவு நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர் சிலர் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து அங்கு யோகாவில் ஈடுபட்டு இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர்.
நபிகள் நாயகம் குறித்து பாஜக நிர்வாகிகள் தெரிவித்த சர்ச்சை கருத்து காரணமாக மாலத்தீவில் இந்தியர்களுக்கு எதிராக பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருவதாக இது நடந்துள்ளது என கூறுகின்றனர்.
இந்நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி முனு மஹாவர், மாலத்தீவு இளைஞர் நலத்துறை அமைச்சர் அகமது மகலூப், இந்திய கலாச்சார அமைப்பின் நிர்வாகி தன்சீர் ஆகியோர் பங்கேற்றனர். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாலத்தீவு அதிபர் தெரிவித்துள்ளார்.