சர்ச்சையில் சிக்கிய பேட்டி..!! விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்ட சாய் பல்லவி..!!

சமீபத்தில் சாய் பல்லவி கொடுத்த பேட்டியில் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்கள் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள், அது வன்முறை என்றால் பசுவை அழைத்துச் சென்ற இஸ்லாமியர் மீது தாக்குதல் நடத்திவிட்டு ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறுகிறார்கள் அதுவும் தவறுதான். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றும் கூறியிருந்தார்.

இந்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. சாய் பல்லவிக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துகள் பகிரப்பட்டது. மத வேறுபாட்டை தூண்டும் வகையில் பேசியதாக சில அமைப்புகள் அவர் மீது போலீசில் புகார் அளித்தது. இந்த நிலையில் போட்டியில் தான் பேசியது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் இது போல் ஒரு வீடியோ வெளியிடுவது இது தான் முதல் முறை. இதற்கு முன் தனது கருத்துக்களை பகிர மட்டுமே வீடியோ பதிவிட்டுள்ளேன். நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு வீடியோ வெளியிடுகிறேன். சில நாட்களுக்கு முன் நான் அளித்த பேட்டி பெரும் சர்ச்சை ஆக்கப்பட்டது.

என்னை பொறுத்தவரை மனிதர்கள் அனைவரும் ஒன்றுதான். அதைத் தான் நான் தனது பேட்டியில் சொன்னேன். இனம், மதம், சாதி, கலாச்சாரம், மொழி அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது. எல்லோரின் உயிரும், உணர்வும் ஒன்று தான். நான் பயின்ற 14 வருட பள்ளி வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் அனைவரும் சமம்.

அனைவரும் என் உடன் பிறந்தவர்கள் என உறுதிமொழி எடுத்து அதுவே மனதில் பதிந்து விட்டது. சமீபத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தின் டைரக்டர் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் இதையே தான் கூறினேன்.

ஒரு மருத்துவராக சொல்கிறேன்.. சர்ச்சைக்கு சாய் பல்லவி வீடியோ வெளியிட்டு  விளக்கம்

ஆனால் நான் சொன்னதை சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள். எனது முழு பேட்டியை கேட்காமல் ஒரு சிறு பகுதியை பார்த்துவிட்டு பதிவிட்டு உள்ளனர். நான் சொன்னதின் உண்மை தன்மையை அவர்கள் ஆராயவில்லை என்றார். மேலும் எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *