ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு..!!! ஒருவர் பலி..!!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் உள்ள குருத்வாராவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கர்தே பர்வான் குருத்வாராவில் குண்டுவெடிப்பு சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

குருத்வாரா வாயிலுக்கு வெளியே குண்டு வெடித்ததில் குறைந்தது இரண்டு ஆப்கானியர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை 6 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குருத்வாராவில் பாதுகாப்பு காவலாளியான அகமதுவை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், காபூலில் உள்ள குருத்வாரா மீது தாக்குதல் நடத்திய குழுவைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தான் இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாகவும் 3 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் காயமடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.

குருத்வாரா இப்போது பயங்கரவாதிகளின் வசம் உள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் குருத்வாராவில் ஏராளமானோர் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் சிக்கி இருந்ததாகவும் தகவல் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *