சோனியா காந்திக்கு தீவிர சிகிச்சை.. !! காங்கிரஸ் கட்சி வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்திக்கு லேசான காய்ச்சல் மற்றும் வேறு சில அறிகுறிகள் இருந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில் சோனியா காந்தி கோவிட் தொடர்பான உடல் நலப் பாதிப்புகள் காரணமாக டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டு செல்லப்பட்டார் என்று தெரிவித்தார்.
மேலும், சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து அக்கட்சிஅறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சுவாசக் குழாயில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்கு சோனியா காந்திக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி விளக்கமளித்துள்ளது.