வெடிக்கும் அக்னிபாத் போராட்டம்..!! தெலங்கானாவில் ஒருவர் உயிரிழப்பு..!!
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தெலங்கானாவில் நடைபெற்ற போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்தார். 15 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இது மேலும் போராட்டத்தின் மூன்றாவது நாளில், பீகார், உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் போராட்டம் நடந்து வருவதால் தென் மாநிலத்திற்கும் பரவியது.
தெலங்கானாவில் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இப்போது ரயில்வே போலீசார் போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
எனினும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே தண்டவாளங்களில் கொட்டிக் கிடந்த கற்களை எடுத்து வீசி எறிந்தனர். ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் மற்றும் பொருட்களை சூறையாடினர்.
இதையடுத்து ரயில்வே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் ஒருவர் உயிரிழந்தார். 15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கற்களை வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 2 காவலர்களும் காயமடைந்தனர். காவல்துறை சந்தீப் சாண்டில்யா மற்றும் பிற உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிலைமையைக் கண்காணித்தனர்.
ரயில் நிலையத்தில் இருந்த கடைகளையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். இளைஞர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்த கூடாது. போராட்டங்களில் வன்முறை கூடாது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார்.