சாதி ரீதியான சர்ச்சை ஆடியோ – 2 ஆசிரியைகள் சஸ்பெண்ட்!
விளாத்திகுளம் அருகே ஜாதி ரீதியாக மாணவர்களிடம் பேசிய விவகாரம் – இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் அதே பள்ளியில் படிக்கும் மாணவரிடம் ஜாதி ரீதியாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது இதனைத் தொடர்ந்து ஆடியோ விவகாரம் தொடர்பான சம்பந்தப்பட்ட
பள்ளி ஆசிரியர் கலைச்செல்வி மற்றும் மீனா ஆகியோரிடம் இன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி விசாரணை நடத்தினார்.
விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கலைச்செல்வி,
மீனா இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியரே ஜாதி ரீதியாக பேசிய விவகாரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது