இலங்கையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கை தொடர்ந்து 4 அமைச்சர்கள் பதவியேற்பு..!!

இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில் தற்போது இலங்கையில் 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதால் இலங்கை அரசுக்கு எதிராக மக்கள் பல போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இதையடுத்து பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். எனினும் அதிபர் கோத்தபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று முன்தினம் பதவி ஏற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து புதிதாக 4 பேர் அமைச்சர்களாக இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் அவர்களுக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சராக முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிசும், பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுக்கான அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வும், சக்தி மற்றும் ஆற்றல் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வும் நியமிக்கப்பட்டுள்ளனர். முழுமையான அமைச்சரவை நியமிக்கப்படும் வரை, நாட்டின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *