திமுகவால் சோதனை : ஆளுநரை சந்தித்த அதிமுக சட்டக்குழு ஆலோசனை உறுப்பினர்கள்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக சட்ட ஆலோசனைக் குழுவினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர்.

அதிமுக சட்ட ஆலோசனை குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், இன்பதுரை உள்ளிட்டோர் ஆளுநரை சந்தித்து பேசி உள்ளனர். சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆளுநரிடம் அதிமுகவினர் மனு அளித்தாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பிறகு அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ”தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினருக்கு போதைபொருட்கள் சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் பற்றியும், இன்று ஆளுகின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற, எதிர்த்துப் பேசுகின்றவர்கள் மீது போடப்படுகின்ற பொய்யான வழக்குகள் பற்றியும் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம். பொய்யான வழக்குகள் மட்டுமல்லாது, எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் காவல்துறை கைது செய்கிறது.

தமிழ்நாடு காவல்துறை பற்றி சொல்வதற்கே சங்கடமாகவும், வருத்தமாகவும் இருக்கிறது. ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையான காவல்துறை என பெயரெடுத்த தமிழ்நாடு காவல்துறை தற்பொழுது திமுகவின் தொண்டர் படையாக மாறிவிட்டது. எதிர்த்து கேள்வி கேட்பவர்களை மட்டுமல்லாது, கேள்விகேட்போரின் உறவினர்கள், அவருடன் தொடர்பிலிருந்தவர்களையும் எந்த சட்டவிதிகளையும் பின்பற்றாமல் எல்லோரையும் காவல்துறை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஆள்கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பற்றி ஆளுநரிடம் எடுத்துரைத்தோம்” என்று கூறியுள்ளார்.

`

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *