சென்னையில் 400 தடுப்பூசி முகாம்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நாளொன்றுக்கு 1600-க்கும் அதிகமானோர் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி மிக முக்கிய பங்காற்றி வருகிறது. இதனையடுத்து, தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் 400 முகாம்களை அமைத்து நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 26) அன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளது.

இதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒரு வார்டுக்கு இரண்டு முகாம்கள் என மொத்தம் 400 கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை தமிழக அரசு அமைத்துள்ளது.

அடுத்த மாத தொடக்கத்தில் கொரோனா மூன்றாவது அலை வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசின் இந்த முகாம்கள் அமைத்து தடுப்பூசி செலுத்தும் பணி முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அத்திக்கடவு  திட்டம் வருகின்ற ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு வரும்… அமைச்சர் மு.பெ சாமிநாதன் உறுதி.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்…

 “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும்”- மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா

-ஊடகவியலாளர் இராகவேந்திரன்  “ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டிய பாஜக நபரை சட்டத்தின் அடிப்படையில்…

தலைமை செயலாளருக்கு பறந்த ஆர்டர்!செந்தில்பாலாஜிக்கு ஸ்டாலின் “செம டோஸ்”?

ஊடகவியலாளர் மெ.சிவநந்தினி செந்தில் பாலாஜியிடம் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்த திமுகவும்…

ஐ.டி ரெய்டு | ‘பாஜகவின் கேவலமான அரசியல்; செந்தில்பாலாஜியை முடக்க அண்ணாமலை திட்டம்’ – திமுக காட்டம்

-ஊடகவியலாளர் இராகவேந்திரன் முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வருமானவரித் துறை…