கோவிஷீல்டு வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு அளிக்கும் – ஆய்வு முடிவில் கண்டுபிடிப்பு!

கோவிஷீல்டு தடுப்பு மருந்து, ஒருவரின் வாழ்நாள் முழுவதும் கொரோனாவிலிருந்து பாதுகாக்கும் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்து வருகிறது. இந்த மருந்தை, இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற பெயரில் தடுப்பூசியினை தயாரிக்கும் நிலையில், அவை பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த மருந்தின் செயல்பாடுகள் குறித்து இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஆக்ஸ்போர்டு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பணுக்களை உருவாக்குவதோடு, ஆயுள் முழுவதும் பாதுகாப்பு அளிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *