சசிகலா வருகையால் மருத்துவமனையில் இருந்து அவசரமாக கிளம்பிய எடப்பாடி

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக் குறைவால் ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரைச் சந்திக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சென்றிருந்தார். அப்போது, அங்கு அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலாவும் அங்கு அவரைச் சந்திக்க வந்துள்ளார்.

இந்தத் தகவல் எடப்பாடிக்குத் தெரிவிக்கப்பட்டதால் உடனடியாக அவர் அவசர அவசரமாக அங்கிருந்து சென்றுள்ளார். அண்மைகாலமாக அதிமுகவைச் சேர்ந்தவர்களுடன் சசிகலா செல்போனில் உரையாடி வரும் நிலையில், அவைத் தலைவரைச் சந்திக்க வந்துள்ளது அதிமுக அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *