தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்!

தமிழகத்தில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
இதனையடுத்து, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப் படுவதாக அறிவித்திருந்தது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 2405 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் கொரோனா பாதிப்பு 148 ஆக குறைந்துள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 49 பேர் பெருந்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 3,006 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் மொத்த குணமடைந்தவரின் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது.