இந்தியாவில் தொடர்ந்து குறையும் கொரோனா!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 8 லட்சத்து 36 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 41,526 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3 கோடியை நெருங்கி வருகிறது.
கொரோனா பாதிப்புடன் தற்போது நாடு முழுவதும் 4,54,118 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 895 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,08,040-ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 37,60,32,586 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *