பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு

தமிழ்நாட்டில் உள்ள அரசு விரைவுப் பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து போக்குவரத்துத் துறை சார்பில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கிலோ மீட்டர் என மாற்றம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பம் கொண்ட பேருந்துகள் என்பதாலும், புதிய சாலை வசதிகள், நவீன வடிவமைப்பு காரணமாக ஆயுட் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா கூறியுள்ளார்.