சென்னையில் ஆவின் பால் நிலையங்களுக்கு சீல் வைப்பு!
திமுக தலைமையிலான தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போலவே ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டது.
அதன்படி, அனைத்து ஆவின் பால் நிலையங்களிலும் புதிதாக மாற்றம் செய்யப்பட்ட விலையுடன் பால் பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது சென்னையில் 22 ஆவின் பால் நிலையங்கள் விலை குறைப்பு செய்யாமல் பழைய விலைக்கு விற்றதால் அவற்றிற்கு தமிழக அரசு சீல் வைத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் உள்ள 25 பால் ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளதாக சேலம் ஆவின் பால் நிலையங்களில் ஆய்வு செய்த பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.