ஜூன் 14 முதல் உயர்நீதிமன்றங்கள் செயல்படும்!

கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் கொரோனா பரவலின் வேகம் சற்றுக் குறையத் தொடங்கியுள்ளது.
ஊரடங்கிற்குபிறகு தொற்று எண்ணிக்கை கணிசமாக குறைந்துவரும் நிலையில், இன்று முதல்வர் நடத்திய ஆலோசனையில் மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிக்கலாம் என உயரதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, என்னென்ன தளர்வுகள் என்பது குறித்த விவரங்களை முதல்வர் நாளை வெளியிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வருகிற திங்கள் முதல் 50% பணியாளர்களுடன் உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் அனைத்து பிரிவுகளும் செயல்படும் என தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்திருக்கிறார். இதற்கென சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 29 வழக்கறிஞர்களும், மதுரைக்கிளைக்கு 15 அரசு வழக்கறிஞர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற ஊழியர்களை சுழற்சிமுறையில் பிரித்து பணிக்குவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.