வெளியானது இரண்டாவது ஆடியோ…விரைவில் அரசியல் களம் காண்பாரா சசிகலா?
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று தமிழக தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு சசிகலா அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இவரது வருகை தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் சசிகலா அவர்கள் அதிமுக தொண்டர் ஒருவரிடம் பேசும் ஆடியோ வெளியானது. அதில் அவர், யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், விரைவில் அனைத்தும் சரியாகும் நான் கண்டிப்பாக மீண்டும் வருவேன் எனவும் அவர் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ அரசியலில் அவரது வருகையை எதிர்பார்த்திருக்கும் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதாக அமைந்தது.
இந்நிலையில், இன்று 2-வது முறையாக சசிகலா அவர்கள் தொண்டர் ஒருவரிடம் பேசும்ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில் அவர், கட்சியை தலைமையேற்று நடத்த நிச்சயம் வருவேன் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை எனப் பேசியுள்ளார்.
இதன் மூலம் விரைவில் தமிழக அரசியல் களத்தில் சசிகலாவின் வருகையை எதிர்பார்க்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.