தமிழகத்தில் 33 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெருந் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 33 ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 6150 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை தவிர காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பெருந் தொற்றுக்கு 335 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கையானது 18,005 ஆக உயர்ந்துள்ளது.