கேரளாவில் வருகிறது முழு ஊரடங்கு

இந்தியாவில், கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மே 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.