தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை!

தமிழகத்தில் மே மாத ஊரடங்கு தொடர்பாக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஆலோசனை செய்ய உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மே மாத ஊரடங்கு மற்றும் மே மாத கட்டுப்பாடுகள் தொடர்பாகவும், பாதிப்பு அதிகமிருக்கும் மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டுமா என்பது தொடர்பாகவும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த இருக்கிறார்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருச்சி, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. ஆகையால் மாவட்டங்களின் சம்பந்தப்பட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தைக் கேட்டு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் இன்று முடிவு எடுக்க உள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு; பிரகாஷ் காரத் 

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதுதான் இந்தியா கூட்டணியின் இலக்கு….