தமிழகத்தில் ஒரேநாளில் 17,000 ஐ நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 16,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்த நிலையில் இன்றைய கொரோனா தொற்று புள்ளிவிவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 16,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,30,167ஆக உயர்ந்துள்ளது. அந்த எண்ணிக்கையில் கடந்த 24 மணிநேரத்தில் சென்னையில் மட்டும் 4,764 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா காரணமாக ஒரேநாளில் 98 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,826ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 51 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 47 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இன்று 1,30,042 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. கொரோனாவிலிருந்து மேலும் 15,114 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 10,06,033 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.