இந்தியாவுக்கு ரூ.135 கோடி… அறிவித்த சுந்தர்பிச்சை!

பெருகி வரும் கொரோனா தொற்று சூழலைக் கணக்கில் கொண்டு இந்தியாவிற்கு ரூ. 135 கோடி நிதியுதவி வழங்குவதாக கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர்பிச்சை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் ஒருநாள் பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவிற்கு உதவ முன்வந்துள்ளன. இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தின் சி இ ஓ சுந்தர்பிச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில் மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.