குஜராத் மாடலுக்கு வந்த சோதனை… இறப்புக்காக காத்திருக்கும் அவலம்!

குஜராத்தில் மருத்துவம் பார்ப்பதற்கு கூட மருத்துவமனைகள் கிடைக்காததால் கொரோனா நோயாளிகள் வீட்டிலிருந்தே கட்டிலுடன் வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதுவும் மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் அதிகம் பாதிக்கப்படுவதுடன், இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது.

அதிலும் பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் சுடுகாட்டில் இறந்த நோயாளிகளுக்கு அடக்கம் செய்வதற்கு கூட இடமில்லாமல் நடைபாதையில் எரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது கோரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் வீட்டிலிருந்து வரும்போதே மருத்துவமனை கட்டில் சகிதம் வருகின்றனர்.

அப்படியே வந்தாலும் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் உள்ள நோயாளி இறந்தால் தான் மருத்துவம் பெற முடியும் என்னும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…