12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக அரசு அரசாணை வெளியிட்டது. இதனையடுத்து, மே 5 ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசும் பல புதிய பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. மேலும், தற்போது நடைபெற்று வரும் செய்முறைத் தேர்வுகள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்னதாக 15 நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என தேர்வு ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…