தமிழகத்தில் முதன்முறையாக 10,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 10,723 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய கொரோனாவின் தாக்கம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் தாக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,723 ஆக பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில்  கொரோனாவால்  பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 9,91,451ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 42 பேர் பலியாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 13,113ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 3,304 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *