மம்தா ஒரு நாள் பிரச்சாரம் செய்ய தடை – தேர்தல் ஆணையம் அதிரடி
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள தடைவிதித்து உத்தரவிட்டது தேர்தல் ஆணையம்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது சர்ச்சைக்குரிய முறையில் பேசியதாக பாஜக அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.இதனையடுத்து இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை எந்த ஒரு முறையிலும் மம்தா பானர்ஜி பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.