உதய சூரியனுக்கு போட்டால் தாமரையில் பதிவாகும் வாக்கு!விருதுநகரில் பரபரப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை முதல் மும்முரமாக நடந்து வருகிறது. விருதுநகரில், காலையில் தொடங்கிய வாக்குபதிவு அமைதியாக நடந்து வருகிறது.
இதனையடுத்து, தற்போது விருதுநகரில் வாக்காளர்கள் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்தால் அது தாமரை சின்னத்தில் வாக்காக விழுவதாக வாக்காளர்கள் புகாரளித்தனர். பொது மக்கள் அளித்த புகாரையடுத்து விருதுநகரில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.