அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு முன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!

பறக்கும்படை அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கில் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து போலீசார் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த கடந்த 12ம் தேதி ஊத்துபட்டி அருகே கோவில்பட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது பறக்கும்படை குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனது வாகனத்தை மறித்த பறக்கும்படை அதிகாரியை அமைச்சர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த அதிகாரி நாலாட்டின்புத்துார் போலீசில் புகார் அளித்தார்.  அமைச்சர் கடம்பூர் ராஜு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் அவர் நேற்று மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் நிபந்தனையின்றி அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

samuthirakani

அப்பா பட வரி விலக்கிற்கு அரசுக்கு பணம் கொடுத்தேன்… உண்மையை சொன்ன நடிகர் சமுத்திரக்கனி 

சேலத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சமுத்திரகனி செய்தியாளர்களிடம் கூறும் போது,…
Annamalai

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டுமாம்; கே.சி.கருப்பணன் ஓபன் டாக்…!

2026 தேர்தலில் அண்ணாமலையை முதலமைச்சராக்க வேண்டும் என பாஜக வற்புறுத்தியதால் கூட்டணி முறிவு….

கடந்த ஆட்சியில் புதிய பேருந்துகள் வாங்காததால்தான் இந்த நிலை- அமைச்சர் சிவசங்கர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஓய்வெடுப்பதற்காக புதிய…