வரும் மாதங்களில் வழக்கத்தை விட அதிக வெப்பம் நிலவும் – சென்னை வானிலை மையம்!

தமிழகத்தில் வரும் மாதங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை உயரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பங்குனி வந்துவிட்டாலே தமிழகத்தில் பகலவனின் பளீர் வெப்பம் உடலை பொசுக்க தொடங்கி விடும். வழக்கம்போல இந்த ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் தொடங்குவதற்கு முன்பாக மக்களை வெப்பம் வாட்டி வருகிறது.
இந்நிலையில் தரைக்காற்று காரணமாக மேலும் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் தரைக்காற்று வீசுவது காரணமாக வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 3 செல்சியஸ் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.