தேர்தல் கூட்டங்களில் கொரோனா விதி பின்பற்றப்படுவதில்லை! நீதிபதிகள் கவலை

உலகை அச்சுறுத்திக் கொண்டிருந்த கொரோனா வைரஸின் தாக்கம் சிறிது குறைந்திருந்த நிலையில், மீண்டும் பாதிப்பு அதிகமாகி வருகிறது. தமிழகத்திலும் தினசரி பாதிப்பு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று வருவதால், தேர்தல் பரப்புரைகளும் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சி தலைவர்களும் பல்வேறு மாவட்டங்களில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், பொது இடங்களில் அதிக மக்கள் கூடுவது வழக்கமாகி உள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவுமா என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் இந்த கூட்டங்கள் அச்சத்தை அதிகரித்துள்ளது. இதனால், கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, அரசியல் பரப்புரைகளில் முறையான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *