தஞ்சாவூரைத் தொடர்ந்து திருச்சி ஆசிரியருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.!

தஞ்சாவூரைத் தொடர்ந்து திருச்சியை சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் தஞ்சை TELC பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய ஆசிரியையின் கணவர். மனைவிக்கு கொரோனா உறுதியான நிலையில், கணவருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, திருச்சியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான பள்ளியில் பணிபுரியும் 70 ஆசிரியர்கள் உட்பட மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது.