கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகள்… அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தின் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேரு நெறிமுறைகளை அரசு விதித்தது.

ஆனால் சில பள்ளிகள் அதனை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டி வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை சரிவர பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டார்.

அதன்படி, கொரோனா நெறிமுறைகளை சரியாக பின்பற்றாத கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு ரூ.12,000 ம், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5000 ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பள்ளிகள் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘அப்பாவை கொல்ல திட்டமிடுகிறார் ஜெகன்..’ சந்திரபாபு நாயுடு மகன் குற்றச்சாட்டு

சந்திரபாபுவை சிறையில் வைத்துக் கொள்ள ஜெகன்மோகன் திட்டமிட்டுள்ளார் சந்திரபாபு மகன் நாரா லோகேஷ்…
Udayanithi

நீட் தேர்வு ரத்து இயக்கத்தில் கையெப்பம் இட முடியுமா?  ஆர்.பி. உதயகுமாருக்கு சவால் விடும் உதயநிதி

நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து திமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்க…

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட  26 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு..! மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரியில் பாஸ்ட்புட் கடையில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வட மாநில தொழிலாளர்கள் 26…