ராஜிவ்காந்தி வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் விடுப்புக்கு தமிழக அரசு மறுப்பு!

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு சாதாரண விடுப்பான இரண்டு மாத விடுப்பை வழங்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ரவிச்சந்திரனின் தாயாருக்கு கண் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் விடுப்பு கோரி வழக்கு தொடரப்பட்டது. இதற்கு, கொரோனா காலம் என்பதால் விடுப்பு தர இயலாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தேர்தல் நேரம் என்பதால் அவருக்கு சரியான பாதுகாப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.