ஏப்ரல் 1க்குப் பிறகும் பள்ளிகள் இயங்கும் – பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்

ஏப்ரல் 1 க்குப் பிறகு கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்படும் என்ற தகவல் பொய்யானது என பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 1 க்கும் பிறகும் வழக்கம் போல, பள்ளிகள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் குறைந்து வந்த கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.