2 நாள் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள்… அவதிக்குள்ளாகி இருக்கும் மக்கள்!

வங்கி ஊழியர்களின் போராட்டத்தால் ஏடிஎம்களில் பணமில்லாத நிலை உருவாகியுள்ளது.
நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறைவங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில் இன்று வங்கி ஊழியர்களின் போராட்டம் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்கள் வங்கிகள் விடுப்பு என்பதாலும் இன்று வங்கி ஊழியர்கள்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாலும், ஏடிஎம்களில் போதிய அளவு பணம் நிரப்பப்படவில்லை. இதனால் மக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்