மதுரை, தேனியில் வருமான வரி சோதனையில் ரூ.175 கோடி சிக்கியது!

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து, அரசு ஒப்பந்ததாரர் வெற்றி என்பவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 20 சதவீத வருவாயை 2 சதவீதமாக குறைத்து வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடத்திய சோதனையில் 3 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று கணக்கில் வராத 175 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது.