தங்க முலாம் பூசப்பட்ட நகைகளை அடகு வைத்து 69 லட்சம்  மோசடி; இருவர் கைது

தங்க முலாம் பூசப்பட்ட  கவரிங் நகைகளை  இரண்டு வங்கிகளில்  அடகு வைத்து,  69 லட்சம்  ரூபாய் மோசடி செய்த இருவர் கைது:

தஞ்சை மாவட்டம்  அம்மாபேட்டையில் உள்ள  தமிழ்நாடு கிராம வங்கி கிளை மற்றும் அம்மாபேட்டையை  அடுத்துள்ள  அருந்தவபுரம்  பெடரல் வங்கி கிளை  ஆகிய இரண்டு வங்கிகளிலும்  தங்க முலாம் பூசப்பட்ட  கவரிங் நகைகளை,

திருக்கோயில்பத்து  கிராமத்தை சேர்ந்த  54 வயது ரமேஷ் என்பவர் அவரது பெயரிலும்,  அவரது மனைவியின்  பெயரிலும்  கடந்த ஓராண்டில்   27 முறை 2 கிலோ எடையிலான போலி நகைகளை வைத்து 69 லட்சம் ரூபாய்  மோசடி செய்துவிட்டதாக

இரண்டு வங்கிகளின் கிளை மேலாளர்களும்   அம்மாபேட்டை  போலீசாரிடம்  புகார் கொடுத்ததையடுத்து தஞ்சை மாவட்ட எஸ்.பி ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி,    மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்டு  புதுச்சேரியில் தலைமறைவாக இருந்த  ரமேசையும்,  

 ரமேசுக்கு மோலி நகைகளை செய்து கொடுத்து மோசடிக்கு  உடந்தையாக இருந்த மன்னார்குடியை சேர்ந்த முருகையன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *