அரசு மருத்துவர்கள் அறிவித்து இருந்த தொடர் போராட்டம் ஒத்தி வைப்பு…!

தமிழகத்தில் மே 29 ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் அறிவித்து இருந்த தொடர் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் வாக்குறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் செந்தில் தகவல்

மே 29 அல்லது 30 ஆம் தேதி சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் தமிழக அரசின் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருப்பதால் 16,000 மருத்துவர்கள் கலந்து கொள்ள கூடிய போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் 2017 ல் இருந்து ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்காக போராடி வருகிறது

அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை 2021 ஜூன் 18 ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மருத்துவர்களுக்காக அரசாணை 293 ஐ வழங்கினார்

அரசாணையால் தங்களுக்கு பயன் இல்லை என சில மருத்துவர்கள் எதிர்த்தார்கள்கள், அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி அரசாணை 293 ஐ மட்டுமே செயல்படுத்த முடியும் என தெரிவித்தார் விருப்பத்தின் பேரில் அரசாணை 293 ஐ அமுல்படுத்தலாம் என அமைச்சர் கூறினார், ஆனால் தற்போது வரை அரசாணை நடைமுறைப்படுத்தவில்லை

தமிழக முதல்வர் தலையிட்டு அரசாணை 293 ஐ உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என கோரிக்கை தமிழகத்தில் உள்ள 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் 2,600 பேராசிரியர்களில் 1,000 பேராசிரியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்படவில்லை மேலும் மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 450 பேராசிரியர்கள், 550 இணை பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 29 முதல் அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *